8 மணி நேர வேலை நேரத்துக்கு பின்னர் ஏற்படும் அவசர மின்வெட்டுகளை சரிசெய்வதில் இருந்து விலகுவதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் மாலை 4.15-க்கு பின்னர் ஏற்படக்கூடிய திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கை இன்று வரை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும், இன்று முதல் கடமை நேரத்தின் பின்னர் எவ்வித சேவைகளிலும் ஈடுபட போவதில்லை என சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும், முறையற்ற சட்டங்களுக்கு எதிராகவும் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு சுட்டிக்காட்டினார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.