அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது.
மதியம் 1.17 விமானம் புறப்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் தீ பற்றி கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 வகையை சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.