கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் உட்பட தென்னிந்திய திரையுலகில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். த்ரிஷா இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் அவர், அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ’கமல்ஹாசன் 234’ படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 50 வது படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படம் த்ரிஷாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் உடன் த்ரிஷா ’கொடி’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணையவுள்ளார்.
அஜித்தின் 50 வது படமான ’மங்காத்தா’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது தனுஷின் 50 வது படத்திலும் த்ரிஷா தான் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.