வீட்டின் மீது மரமொன்று முறிந்து விழுந்த நிலையில், நித்திரையில் இருந்து தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளனர்.
நேற்று(26) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.