உக்ரைன் நாட்டை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இத்தாலிய கடற்கரையில் தனது நண்பருடன் நீந்தி குளிக்க சென்றுள்ளார்.
எனினும், இதில் அவர் காணாமல் போயுள்ளார். 16 மணிநேரத்திற்கு பின்பு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கடலில் நீந்த சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
இதன்பின் உடலில், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில், 28 முறை அவரது உடலில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
உயிரிழப்பதற்கு முன் அவர், முழு அளவில் அறிகுறியற்றவராகவே இருந்துள்ளார் என இறப்பு பதிவு அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த அளவில் வைரசானது பாதித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு, இங்கிலாந்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆய்வாளர்கள், உயிரிழந்த 50 வயது நபருக்கு 27 நாட்களாக நடத்திய கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது.
இதனால், உயிரிழந்த பின்னரும் உடலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.