இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும், ஓட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் காயமடைந்து ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்ல – களுபான என்ற இடத்தில் இன்று (7) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடையிலிருந்து பண்டாரவளையை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ், எதிர்த்திசையில் சென்ற ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவருடன் பஸ்ஸில் பயணித்த 11 பேரும் காயங்களுக்குள்ளாகினர்.
ஓட்டோவில் பயணித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்து குறித்து ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.