ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் ஸ்தலத்தில் இறந்த சம்பவம், யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.
பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்ட ரயில் ஒன்று, யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது, கூட்டமாக தண்டவாளத்தில் பயணித்த மாடுகளை மோதித் தள்ளியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் ஸ்தலத்திலேயே இறந்துள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.