முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல (47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ்(28) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், நெல் வெட்டும் இயந்திரத்தை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.