யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலக்காய், பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள போதும், எவரும் கைது செய்யப்படவில்லை.
அது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.