கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னக்கும்பர தெக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த நபர் நேற்று (23) தனது வீட்டுக்கு செல்லும் பாதையை துப்புரவு செய்துகொண்டிருந்த போது, மேலே இருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகள் நபரை மீட்கும் போதே, அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.