மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலான அதிவேக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொலன்னறுவை – கொழும்பு கோட்டையில் இருந்தான நகரங்களுக்கிடையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘புலதிசி’ அதிவேக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்துக்கு அமைவாக விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதன்படி, இம்மாதம் 28ஆம் திகதி முதல் மட்டக்களப்பு – கொழும்பு ‘புலதிசி’ கடுகதி சேவையாக இடம்பெறவுள்ளது.
இந்த ரயில் சேவை, மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு, காலை 08.45 மணிக்கு கொழும்பு – கோட்டையை சென்றடையும்.
மீண்டும் பிற்பகல் 3.05 கொழும்பு – கோட்டையிலிருந்து புறப்பட்டு, இரவு 9.52 க்கு மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.