கண்டி – மடவளை வங்குவகடை பிரதேசத்தில் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததால் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த 4 பேர் மண்ணுள் புதைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதேசவாசிகள் உடனடியாக செயல்பட்டு இரண்டு பேரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிய நிலையில், கடுமையான போராட்டத்தின் பின்னர் மேலும் இருவரை வெளியில் எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களில் மூவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.