மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நேற்றைய தினம் நோயாளியொருவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பில் இன்றைய தினம் (25) போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதிபதி, குறித்த சிற்றுண்டிச்சாலையை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.