யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று (27) அதிகாலை வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.