திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவா நகர் பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை, நேற்றிரவு (30) கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மூன்றரை அடி நீளமாள வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
தேவா நகர் பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்புனர்வுச் சம்பவம் மற்றும் அப்பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் மேற்படி நபர் தொடர்பு பட்டவர் என்றும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.