ஏப்ரல் 30ம் திகதி முதல் கொரோனாவுக்கெதிரான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று (05) காலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களில் காதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள்’ மற்றும் முழு தடுப்பூசி பற்றிய வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.