கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க பெண் என பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்று ஆற்றின் கரையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து 15,000 ரூபாய் பணமும் மேலும் சில மருந்துப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.