பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து, பதுளை பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் 30 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (26) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர், பொலிஸ் மோப்ப நாயின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தம் படிந்த ஆடைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.