கண்டியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைக்குழந்தையுடன் பல நாட்களாக கண்டியில் சுற்றித் திரிந்த குறித்த பெண்ணை, பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் அவர் சில காலமாக பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததுள்ளமை தெரியவந்தது.
குறித்த பெண்ணின் வாக்குமூலத்திற்கு அமையச் சம்பவம் தொடர்பில் முன்னணி போதைப்பொருள் வியாபாரி ஒருவரையும் அவரது கூட்டாளியையும் கண்டியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.