படல்கம – ஆதிமுல்ல பகுதியில் அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாயை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன்படி, சிறுவனின் தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
படல்கமுவ ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட போதே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7ஆம் திகதி குறித்த சிறுவனின் தொண்டையில் சளி சிக்கியதால் சுகயீனமுற்றுள்ளதாகவும், நோய் குணமடைவதற்காக பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மத வழிபாடுகளின் போதே சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனின் உயிரை மீட்க வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.