திருகோணமலை, கந்தளாய், ஜெயந்த மாவத்தையில் வீடு ஒன்றுக்கு முன்னால் நேற்று (12) பாரிய குழி ஏற்பட்டமையால், அச்சத்தின் காரணமாக இரு குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தெரியவருவதாவது, ஜயந்த மாவத்தை, இலக்கம் 73/5 இல் அமைந்துள்ள வீட்டின் முன்பாக திடீரென பாரிய சத்தத்துடன் குழி ஒன்று ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் வந்துள்ளது.
அது சறிது சிறிதாக பெரிதாகி சுமார் 6 அடி ஆழமும் 12 அடி அகலுமுமாக அகன்று சென்றதாக, இவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இது பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் சமிந்தி விஜேரத்னவுடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆகியோர் அக்குழியைப் பார்வையிட்டுள்ளனர்.
இந்தக் குழி ஏற்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.