பசறை – கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (01) தேயிலை மலையை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்குக்கு உள்ளாகியுள்ளனர்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.
எனினும், குளவிக்கூடுகளை அகற்றி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை என தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.