ஒரே நாளில் அக்கரப்பத்தனை பகுதிகளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சிலையின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பச்சைபங்களா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலிலுள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருகில் உள்ள உருலேக்கர் தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலிலும் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் சம்பவம் இடம்பெற்ற கோவில்களுக்குச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.