பசறை- உடகம பிரதேசத்தின் லொக்கல்ஓயா ஆற்றில் நேற்று (2) அடித்துச் செல்லப்பட்டவர் இன்று (3) காலை மடுகஸ்தலாவ பிரதேசத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசறை- பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த மொஹமட் மொஹதீன் நிலான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சுரங்க பாதுகாப்பு பணியாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன், சம்பவ தினம் லொக்கல்ஓயா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வௌ்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டு, நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.