Sri Lanka News Live and Tamil Breaking News

இந்த 5 ராசி பெண்களை திருமணம் செய்கிற ஆண்கள் படாதபாடு படப்போகிறார்களாம்.!

0 23

- Advertisement -

ஒருவரை நாம் காதலிக்கும் போது முதலில் அவர்களின் நல்ல குணங்கள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். திருமணத்திற்கு பின் ஒருவரின் கெட்ட குணங்கள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும்.

குறிப்பாக பெண்களை பொறுத்தவரை திருமணத்திற்கு முன் எதெல்லாம் அவர்களுக்கு தனது காதலரிடம் பிடித்ததோ, அவையனைத்தும் திருமணத்திற்கு பின் பிடிக்காமல் போய்விடும்.

திருமணத்திற்கு பின் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவர்களை குற்றம் சாட்டத் தொடங்குகிறார்கள். திருமணத்திற்க்கு பின் உங்கள் காதலி உங்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று ஒருபோதும் உங்களால் கணிக்க இயலாது.

ஒருவேளை அவர்களது பிறந்த ராசிகள் அதற்கு உதவியாக இருக்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசி பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரை கட்டுப்படுத்தி படாதபாடு படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம் – இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் அமைதியாகவும் சீரியஸாகவும் இருப்பார்கள் ஆனால் ஒருபோதும் தங்கள் கணவரை நம்ப மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தை காரணமாக, அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் துணையை கட்டுப்படுத்தி கட்டளையிடுகிறார்கள். மேலும் கணவனை அவர்களின் சொந்த விருப்பப்படி கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். அனைத்து விஷயங்களிலும் இறுதி முடிவு இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

தனுசு – தனுசு ராசி பெண்கள் கட்டளையிடுவதில் வல்லவர்கள் என்று அவர்களுடன் பழகியவர்கள் நன்கு அறிவார்கள், அதே சமயம் அவர்கள் எந்த உத்தரவுகளையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இந்த பெண்கள் எப்போதும் தங்கள் சொந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள், எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் யாருடைய ஈடுபாட்டையும் விரும்புவதில்லை மற்றும் தங்கள் துணையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

துலாம் – இந்த ராசி பெண்கள் எப்போதும் தலைமை தங்குவதை விரும்புகிறார்கள். துலாம் ராசிப் பெண்கள் தங்கள் துணையைப் பற்றிய ஒவ்வொரு தகவலையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கணவன் என்ன செய்தாலும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அது நடக்காத பட்சத்தில் வெடித்துச் சிதறுவார்கள். கணவனை விரல் நுனியில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக இருக்கும்.

கன்னி – இந்த ராசிப் பெண்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள், தங்கள் துணையை வேறு யாருடனும் பார்க்க விரும்ப மாட்டார்கள். அவர்களின் இந்த இயல்பு காரணமாக, இந்த ராசி பெண்கள் தங்கள் துணையை தங்கள் கால்விரலில் வைத்திருக்கிறார்கள். கணவரை பாதுகாக்க அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான் தீர்வு என்று நம்புகிறவர்கள் இவர்கள்.

கடகம் – கடக ராசி பெண்களுக்கு எப்படி தங்கள் கணவரை கட்டுப்படுத்த வேண்டுமென்று நன்கு தெரியும். அவர்கள் இதனை கணவர் மீதான அக்கறை என்று நியாயப்படுத்துவார்கள். அவர்களின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், கையாளும் வழிகளும் மிகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும். கணவரை மூச்சுமுட்டும் அளவிற்கு இறுக்கக்கூடாது என்று இவர்கள் உணர வேண்டும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More