ஊழியர்களின் செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்குக்காக அவர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொலம்பியாவில் குழந்தை இல்லாத சிலர் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கொலம்பிய லிபரல் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகின்றது.