செனகலின் (Senegal) டிவோவ்னே (Tivaouane) எனும் நகரில் மருத்துவமனை ஒன்றில் மூண்ட தீயில் 11 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அது குறித்து செனகல் அதிபர் நேற்றிரவு அறிவித்ததுடன், பொதுமருத்துவமனையில் நேர்ந்த தீச்சம்பவத்துக்கு அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
மின்சாரக் கோளாறு காரணமாகத் தீ மூண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. தீ மிக வேகமாகப் பரவியிருக்கிறது. சம்பவத்தில் மகப்பேற்றுப் பிரிவில் இருந்த 3 குழந்தைகள் காப்பாற்றப்பட்டன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் பொதுச் சுகாதார இடங்களில் இத்தகைய பல தீச்சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
ஏப்ரல் மாதம் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை தாமதமடைந்து அதனால் அவர் மாண்ட சம்பவத்தை அடுத்து, செனகலின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு கடும் குறைகூறலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.