- Advertisement -
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5.00 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சீமெந்து விலை, பால் மா விலை, எரிபொருள் விலை ஆகியனவற்றை அதிகரிப்பது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.