ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பயணிக்கும் பயணிகளுக்கு புதிய தடை
இந்தத் தடை, சாண்ட்விச்சுகள், சீஸ், உலர்ந்த அல்லது சமைக்காத இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12 முதல் அமலாகும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் பயணிகள் மாடு, ஆடு, பன்றி இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்துள்ளது.
இந்தத் தடை, சாண்ட்விச்சுகள், சீஸ், உலர்ந்த அல்லது சமைக்காத இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
இவை பாக்கேஜ் செய்யப்பட்டவையாக இருந்தாலும் அல்லது டியூட்டி ஃப்ரீ கடைகளில் வாங்கப்பட்டவையாக இருந்தாலும் கூட பிரித்தானியா கொண்டு செல்ல அனுமதி இல்லை.
பயணிகள் எந்த வகையான போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், இந்த விதிகளை மீறினால் அதிகபட்சமாக 5,000 பவுண்டு (சுமார் 5,900 யூரோ) அபராதம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, பல பயண நிறுவனங்கள் தங்களின் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றன.
அதே நேரத்தில், குழந்தைகளுக்கான பால், குறிப்பிட்ட மருத்துவப் பயன்பாட்டு உணவுப் பொருட்கள், சாக்லேட், இனிப்புகள், பான், கேக், பாஸ்தா போன்றவைகள் வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்த புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம், ஐரோப்பாவில் மீண்டும் தோன்றி வரும் ‘la fièvre aphteuse’ எனப்படும் கால்நடை நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதாகும்.
2011க்குப் பிறகு காணப்படாத இந்த நோய், 2025 ஜனவரியில் ஜெர்மனியில் மீண்டும் கண்டறியப்பட்டது. பெரிய மிருகங்களில் நோய் லேசானதாக இருந்தாலும், இளம் மிருகங்களில் மரணத்திற்கும் காரணமாக முடியும் என்று பிரான்ஸ் விவசாய அமைச்சகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Editorial Staff