- Advertisement -
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் 46 வயதுடையவர் எனவும் அப்பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.