- Advertisement -
எரிபொருள் விலை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் இன்று (22) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை கூறியுள்ளார். இதனிடையே, எரிபொருள் விலையை அதிகரிக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலையை 5 ரூபாவாலும், ஓட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலையை 5 ரூபாவாலும் லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், மற்றைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறவில்லை என IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.