Thursday, March 28, 2024
Homeதேசியசெய்திகள்எரிபொருள் விலை அதிகரித்தாலும் இதற்கு அனுமதி இல்லை வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரித்தாலும் இதற்கு அனுமதி இல்லை வெளியான அறிவிப்பு

HTML tutorial

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் அல்லது ரயில் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

15 தொடக்கம் 20 வீதம் வரையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்த போதிலும் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் திடீரென பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஸ்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக எதிர்காலத்தில் விசேட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் திரு.அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

மேலும் செய்திகள்

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க