நாடளாவிய ரீதியாக இன்றைய தினம் 10சதவீத தனியார் பேருந்து சேவைகளே இடம்பெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் இன்மையே இதற்கான பிரதான காரணம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் என்பன தெரிவித்துள்ளன.
தனியார் பேருந்து தொழிற்துறையை வீழ்ச்சி பாதையில் இட்டும் செல்லும் சூழ்ச்சி இடம்பெறுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ ஊடாக உரிய வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தனியார் பேருந்துகளுக்கு உரிய வகையில் எரிபொருள் வழங்க தவறும் பேருந்து டிப்போக்களை சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.