- Advertisement -
ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று (15) நண்பகல் 12 மணிமுதல் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக ரயில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மருதானையில் உள்ள ரயில் தலைமையகத்தில் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பையடுத்து, கொழும்பு – கோட்டையிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
பதவி உயர்வு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளை முன்வைத்து சில ரயில் தொழிற்சங்கங்கள் இவ்வாறு திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.