குழந்தை பிறப்பு வீழ்ச்சி; ஆணுறைக்கான வரி ஜனவரி 1 முதல் அமல்!
புதிய வரி படி கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்புகளுக்கு முன்னைய வரி விலக்கு பொருந்தாது, மற்றும் 13% கூட்டப்பட்ட மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்த நாட்டில், 1980 முதல் 2015 வரை தம்பதிகள் ஒரே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது; ஒரு குழந்தைக்கூட அதிகமாக பெற்றால் சலுகைகள் மறுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற அனுமதி வழங்கப்பட்டாலும், சமீப ஆண்டுகளில் பிறப்பு விகிதம் மேலும் சரிந்து, 2021ஆம் ஆண்டு 3 குழந்தைகள் பெற முடியும் என கொள்கை தளர்த்தப்பட்டிருந்தது. அரசு பல சலுகைகள் மற்றும் உதவித் தொகைகளை அறிவித்தாலும், பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை; இதனால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சீன அரசு ஜனவரி 1 முதல் புதிய ஆணுறை வரியை அமல்படுத்தும் என்று அறிவித்துள்ளது.
புதிய வரி படி கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்புகளுக்கு முன்னைய வரி விலக்கு பொருந்தாது, மற்றும் 13% கூட்டப்பட்ட மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும். சுகாதார நிபுணர்கள், இதனால் கர்ப்பம் திட்டமிடாத முறையில் ஏற்படலாம் மற்றும் பாலியல் ரீதியிலான நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
சீன சமூக ஊடகங்களில் புதிய வரியைத் தொடர்ந்து விவாதங்கள் தொடங்கியுள்ளன; பலர் விலை உயர்ந்தாலும், குழந்தைகளை வளர்ப்பது ஆணுறை வாங்குவதற்கும் அதிக செலவு தேவைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிறப்புகளைக் காட்டிலும் இறப்புகள் அதிகமாகி, 2023ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, சீனாவை முந்தியுள்ளது.
Editorial Staff