- Advertisement -
பதுளை – லுணுகலை, அலகொலகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டில் இருந்த உபகரணமொன்றுக்கு மின்சாரம் பெற்றுக் கொள்ள முயன்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.