யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பேருந்தில் மோதுண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண் ஒருவரை மோதியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதன்பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காகச் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.