அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சாணக்க, விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ், ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
குசல் மெண்டிஸின் விக்கெட் காப்பாளர் பொறுப்பை தினேஷ் சந்திமல் எடுத்துள்ளார்.
இலங்கை அணி புறப்படுவதற்கு முன்னரே, சாமிக கருணாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றார். இவர், அவுஸ்திரேலியாவை நோக்கி, இன்றிரவு பயணிக்கவுள்ளார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், ஐந்து போட்டிக்களைக் கொண்ட டி-20 போட்டிகள் பெப்ரவரி 11ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.