ஏ 9 வீதியில், பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென, பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது.
இதனையடுத்து ஹயஸ் ரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாடை இழந்து ஏ9 வீதியருகே கவிழ்ந்து வீழ்ந்தது.
இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.