இலங்கையில் கொலைக் குற்றச்சாட்டில் 10 பேருக்கு மரண தண்டனை!
கடந்த 2011 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய, பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய, பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய வழக்கு இன்று எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, தனிப்பட்ட தகராறில் 30 வயதுடைய ஒருவர் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பாறைகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக நான்கு பெண்கள் உட்பட 12 பேர் மீது எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கில் ஒரு பெண் உட்பட இரண்டு பிரதிவாதிகளை விடுவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, மீதமுள்ள 10 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Editorial Staff